இந்த ஆண்டின் ஞானபீட விருது குஜராத் எழுத்தாளர் ரகுவீர் சௌத்ரிக்கு வழங்கப்படுகிறது.
51-வது ஞானபீட விருதுக்கான எழுத்தாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட எழுத்தாளர் நம்வார் சிங் தலைமையிலான தேர்வுக் குழு, ரகுவீர் சௌத்ரியை நேற்று தேர்ந்தெடுத்தது.
கடந்த 1961 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஞானபீட விருது, இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகளிலும் உள்ள சிறந்த எழுத்தாளர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சௌத்ரி, குஜராத் இலக்கிய வட்டத்தில் பிரபலமானவர். 80க்கும் அதிகமான புத்தங்களை எழுதியுள்ள அவர் முதலில் நாவல்கள் மற்றும் கவிதைகள் எழுதினார். பின்னர் அவர் நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் சிறு கதைகளையும் எழுதியுள்ளார்.
மனித வாழ்வின் அடிப்படை தத்துவங்கள் குறித்த அவரது நாவல்கள் அம்ரீதா, வேணு வட்ஸ்லா, உபர்வாஸ் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
77 வயதாகும் சௌத்ரி, கடந்த 1977 ஆம் ஆண்டு தனது உபர்வாஸ் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.
ஞானபீட விருது பெறும் சௌத்ரிக்கு ரொக்க பரிசுடன், சான்றிதழ் மற்றும் வெண்கலத்தால் ஆன சரஸ்வதி சிலையும் பரிசளிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.23! 22 காசுகள் சரிவு!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


