

பிகார் தோல்விக்கு பின் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் கட்சி அளவிலேயே விவாதிக்கப்பட வேண்டும் என்றார் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு.
பிகார் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சக்கு ஏற்பட்ட தோல்விக்கு பின், அறிக்கை வெளியிட்ட மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர், தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், தேர்தலில் முன்னணியில் இருந்து பிரசாரம் செய்தவர்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்நிலையில் இன்று பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு, மூத்த தலவைர்கள் தங்கள் கருத்துகளை கட்சி கூட்டங்களில் மட்டுமே தெரிவித்த வேண்டும். அதை பொதுவெளியில் விவாவதிப்பது நல்லதல்ல என்றார்.
கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மோடி தலைமையில் எதிர்கொண்ட பாஜக, இதுவரை இல்லாத அளவில் அதிக இடங்களைப் பெற்று தனிபெரும் கட்சியாக ஆட்சியை பிடித்தது. மேலும், அஸ்ஸாம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில் பிகார் தேர்லில் ஏற்பட்ட தோல்விக்கு குறிப்பிட்ட ஒருவரையோ அல்லது குழுவையோ பொறுப்பேற்க வேண்டும் என கூற கூடாது என்றார் நாயுடு.
கடந்த 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தபோது எந்த தனிப்பட்ட நபரும் பொறுப்பேற்கவில்லை என்ற நாயுடு 2004 தேர்தலில் தானும், 2009 தேர்தலில் அத்வானியும் கட்சியை வழிநடத்தியதாக குறிப்பிட்டார்.
பாஜகவின் வளர்ச்சிக்கு அத்வானி அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது என்ற நாயுடு, தற்போது இந்தியாவின் மிக பிரபல தலைவராக மோடி இருக்கிறார் என்றார்.
ஒவ்வொரு பாஜக உறுப்பினரும், பாஜக அனுதாபிகளும் மோடியின் கரத்தை வலுப்படுத்து வேண்டும் என்றார் நாயுடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.