பயணியர் ரயிலில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில், கத்தீகர்- மலடா இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலிலிருந்து 7 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
Updated on
1 min read

வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் கத்தீகர்- மலடா இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலிலிருந்து 7 வெடிகுண்டுகள்  கைப்பற்றப்பட்டன.

போலீஸாருக்கு  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் பணியின் போது இந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ரயில்பெட்டியின் இருக்கைக்கு கீழே ஒரு அட்டை பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 7 குண்டுகளையும் போலீஸார் நேற்று இரவு கைப்பற்றினர்.

கைப்பற்றட்ட குண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com