

தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் சர்வதேச பொருள்காட்சியில் மேகி நூடூல்ஸ் விற்பனை சக்கைபோடு போடுகிறது.
ஆறு மாத தடை விலக்கப்பட்டப் பிறகு மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள நெஸ்லே நிறுவனத்தின் மேகி, மீண்டும் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்று வருகிறது.
தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் பொருள்காட்சியின், உணவு சாலைக்கு வரும் பெரும்பாலனவர்கள் மேகி நூடூல்ஸ் ரூசிக்க தவறுவதில்லை.
பொருள்காட்சியில் முதன்முறையாக பங்கேற்றுள்ள மேகி உணவுசாலையில் நாள்தோறும் 500 முதல் 600 தட்டுகள் நூடூல்ஸ் விற்பனை செய்யப்படுகிறது என்றார் மேகி விற்பனை பிரிவு அதிகாரி சோபிகித் சர்மா.
ஆறு மாத தடைக்குப் பிறகு மேகி விற்பனைக்கு வந்துள்ளது. எனினும் மேகி ரூசிக்கு அடிமையானவர்களுக்கு இது அதிக காலம். சிறுவர்கள், இளைஞர்களை விட நடுத்தர வயதினரும், வயதானவர்களும் அதிக அளவில் மேகியை வாங்கி செல்கின்றனர். மக்கள் மேகி வரவுக்காக ஏங்கி நின்றுள்ளனர் என்றார் சர்மா.
மேகி நூடூல்ஸ் விற்பனையை ஒப்பிடும் போது பிற உணவுசாலைகளில் விற்பனை 2 சததுக்கும் குறைவாக இருப்பதாக அங்கிருக்கும் அதிகாரிகள் கூறுகின்றனர். தோசை, பேல்பூரி, பிஸா போன்ற பல உணவுப் பொருள்கள் விற்பனைக்கு இருந்தாலும், அனைவற்றையும் மேகி பின்னுக்கு தள்ளிவிட்டது.
அளவுக்கு அதிகமாக காரீயம் இருந்ததாக கூறி, மேகி நூடூல்ஸ் விற்பனை கடந்த மே மாதம் தடை செய்யப்பட்டது. பல்வேறு நீதிமன்ற போராட்டங்களுக்கு பின்னர் நெஸ்லே நிறுவனம் மேகி விற்பனையை சில நாள்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.