காஷ்மீரில் ராணுவ முகாமுக்குள் நுழைந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பயங்கர ஆயுங்களுடன் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பொதுமக்களில் ஒருவரும் பலியானார்.
காஷ்மீரில் ராணுவ முகாமுக்குள் நுழைந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பயங்கர ஆயுங்களுடன் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பொதுமக்களில் ஒருவரும் பலியானார்.

குப்புவாரா மாவட்டம், தாங்தர் நகரில் உள்ளது கோர்கா ரைஃபில் ஆயுதப் படை முகாம். இங்கு அதிகாலை 6.15 மணிக்கு நுழைந்த மூன்று தீவிரவாதிகள் கொரில்லாத் தாக்குதல் நடத்தினர்.

பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள் மீது, ராணுவத்தினர் திருப்பி தாக்கினர். ஏழு மணி நேர கடுமையான சண்டைக்குப் பிறகு அந்த மூன்று தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இத்தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவரும் இறந்ததாக ராணுவ வட்டாரங்கள் கூறின.

தீவிரவாதிகள் சிறிய ரக கைத்துப்பாக்கிகளையும், துப்பாக்கி மூலம் கிரானைட் தாக்குதல் நடத்தும் ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல் நடத்தியதாக, குப்புவாரா மாவட்டத்தின் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் இசாஜ் அகமது கூறினார்.

குப்புவாரா மாவட்டத்தில் உள்ள தாங்தர் பகுதி இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோடு அருகே இருப்பதால், இவ்வழியாக தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து விடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com