இஷ்ரத் ஜஹான் வழக்கு: வன்ஜாரா குஜராத்துக்குள் நுழைய சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அனுமதி

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பிணையில் இருக்கும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி டி.ஜி. வன்ஜாரா, குஜராத் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பிணையில் இருக்கும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி டி.ஜி. வன்ஜாரா, குஜராத் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குஜராத்துக்கு வரவும், குஜராத்தில் தங்கியிருக்கவும் அனுமதி வழங்கியுள்ளது சிறப்பு சிபிஐ நீதிமன்றம்.

பிணைத் தொடர்பான நிபந்தனைகளை தளர்த்தக் கோரி வன்ஜாரா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஜே. ராஜே, பிணைத் தொடர்பான நிபந்தனையில் குஜராத்துக்கு வரவும், தங்கியிருக்கவும் பிறப்பிக்கப்பட்டத் தடையை ரத்து செய்தார்.

மேலும், குஜராத்தில் அவர் தங்கியிருக்கும் போது ஒவ்வொரு சனிக்கிழமையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com