கோல்பாரா: அஸ்ஸாமில் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்தி மேக் இன் அஸ்ஸாம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான் என்று ராகுல் தெரிவித்தார்.
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட தேர்தலுக்கான பிரசாரப்பொதுக் கூட்டம் கோல்பாராவில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ஏழை மக்களின் நலன்கள், வளர்ச்சி மீது காங்கிரஸ் கட்சி அக்கறை கொண்டுள்ளது. அஸ்ஸாமைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மேக் இன் அஸ்ஸாம் திட்டத்தை செயல்படுத்த தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் அரசு உறுதிபூண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மேக் இன் இந்தியா திட்டம் குறித்து பேசுகிறார். ஆனால், நாங்கள் அஸ்ஸாம் வளர்ச்சியடைய வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம். அதைத்தான் கடந்த 15 ஆண்டுகளாக அஸ்ஸாமில் நாங்கள் செய்து வருகிறோம்.
அஸ்ஸாமில் அமைதியை கொண்டு வந்தது காங்கிரஸ்தான். தனிநபர் வருமான அளவை அதிகரிக்கச் செய்ததும் காங்கிரஸ்தான் என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.