திருவனந்தபுரம் : சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் மீது, கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
உம்மன் சாண்டி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சரிதா நாயர் குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து கேரள நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, உம்மன் சாண்டி, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவதூறான தகவலைக் கூறியதாக சரிதா நாயர் மீதும், இது தொடர்பான செய்தியை வெளியிட்ட 2 மலையாளம் நாளிதழ்களின் செய்தி ஆசிரியர்கள் மீதும் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
முன்னதாக, சூரிய மின்தகடு முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர், கடந்த 2013ஆம் ஆண்டு போலீஸ் காவலில் இருந்தபோது 23 பக்க கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அதில், உம்மன் சாண்டி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்ததாக மலையாள செய்தி ஊடகம் ஒன்றில் அண்மையில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாநிலங்களவை பெரும்பான்மைக்கு 17 பேர் மட்டும் தேவை: ஆம் ஆத்மி எம்.பி.க்களால் பலம்பெறும் தே.ஜ. கூட்டணி!
தமிழ்நாட்டில் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

