ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை இணைப்பின் வழியாக குரல்வழி அழைப்பு சேவை வழங்க, மத்திய தொலைத்தொடர்பு துறை அளித்த
Updated on
1 min read

புது தில்லி:  ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை இணைப்பின் வழியாக குரல்வழி அழைப்பு சேவை வழங்க, மத்திய தொலைத்தொடர்பு துறை அளித்த ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விதிகளை மீறி, 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும், இதனால் மத்திய அரசுக்கு ரூ.22,842 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறி வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வு, மனுவில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com