ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தை எதிர்த்து கட்ஜு மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் குறித்து விமர்சித்ததற்காக தமக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும்

News image
Updated On :15 டிசம்பர் 2016, 8:23 pm

DIN

மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் குறித்து விமர்சித்ததற்காக தமக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்ஜு வெளியிட்ட முகநூல் பதிவில், காந்திஜியை ஆங்கிலேயர்களின் ஏஜெண்ட் என்றும் நேதாஜியை ஜப்பானின் ஏஜெண்ட் என்றும் விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் தேதி மாநிலங்களவையிலும் 12-ஆம் தேதி மக்களவையிலும் கட்ஜுவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.
அதை எதிர்த்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் கட்ஜு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எனது முகநூல் பதிவில் "காந்திஜியை மதிக்கிறேன்; ஆனால், ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களைப் பிரித்துப் பார்த்தார்' என்றுதான் கூறினேன். அதேபோல், "நேதாஜியின் நடவடிக்கைகளின் காரணமாக அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஜப்பானின் விருப்பத்துக்குப் பலியாகி விட்டார்' என்றும் கூறியிருந்தேன்.
தனிநபரான என் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வர, நாடாளுமன்றத்துக்கு அதிகாரமில்லை.
மேலும், கண்டனத் தீர்மானம் தொடர்பாக எனது கருத்தையோ அல்லது எனது வழக்குரைஞரின் வாதத்தையோ கேட்க வேண்டும் என்று மக்களவைத் தலைவருக்கும் மாநிலங்களவைத் தலைவருக்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வின் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்க்கண்டேய கட்ஜுவின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.