விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக மோடி உறுதி அளிக்கவில்லை: ராகுல்

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதாக மோடி எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக மோடி உறுதி அளிக்கவில்லை: ராகுல்


புது தில்லி: விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதாக மோடி எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை ராகுல், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

அது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ராகுல், நாட்டில் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரித்துள்ளது. எனவே, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தினேன்.

அனைத்துப் பிரச்னைகளையும் கேட்டுக் கொண்ட மோடி, விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து உறுதி அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மதியம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com