பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் 'திடீர்' ராஜிநாமா!

யூனியன் பிரதேசமான தில்லியின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த நஜீப் ஜங் தன்னுடைய பதவியை 'திடீர்' ராஜிநாமா செய்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:58 pm

புதுதில்லி: யூனியன் பிரதேசமான தில்லியின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த நஜீப் ஜங் தன்னுடைய பதவியை 'திடீர்' ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

தில்லி துணை நிலை ஆளுநராக பதவி வகித்த காலகட்டத்தில் அளித்த உதவி மற்றும் ஒத்துழைப்புக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  

நெருக்கக்கடியான காலகட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி தில்லியில் அமல்படுத்தப்பட்டிருந்த பொழுது சிறப்பாக ஒத்துழைப்பு அழைத்த தில்லி பொதுமக்களுக்கும் நன்றி.

கடந்த இரண்டு வருடமாக நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்த தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் எனது நன்றி.

ராஜிநாமாவிற்கு பின்னர் எனது  முதல் காதலான படிப்பை நோக்கி செல்ல இருக்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.