நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, தில்லி மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை காலை வாபஸ் பெறப்பட்டது.
இந்த விவகாரத்தில் தில்லி உயர் நீதிமன்றம் தலையிட்டு, ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி. ரோஹினி மற்றும் நீதிபதி ஜெயந்த் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவும், நிலுவைத் தொகையை இன்னும் இரண்டு நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டதன் அடிப்படையில், தில்லி துப்புரவுத் தொழிலாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
மேலும், துப்புரவு தொழிலாளர்களின் கூட்டு இயக்கமானது, வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு, பணியைத் துவக்குவதாக நீதிபதிகளிடம் உறுதி அளித்துள்ளது.
நிலுவை ஊதியத்தை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லி மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் கடந்த கடந்த 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக, மாநகராட்சி மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாளை. தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

பாளை.யில் அதிமுக பிரமுகா் மகனுக்கு அரிவாள் வெட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 82.14 சதவீதம் வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

