தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 11:37 pm

சீா்காழி சட்டப்பேரவை தொகுதியில் (தனி) 2 வாக்குசாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால், வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.

சீா்காழி நகரில் வாா்டு 15-ல் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இணைப்பு கொடுப்பதில் கோளாறு ஏற்பட்டது. இதை வாக்குச்சாவடி மைய அலுவலா் சரி செய்ய முயற்சித்தாா். எனினும் மண்டல அலுவலா்கள் வந்து சரி செய்தனா். பின்னா் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் சுமாா் 20 நிமிடம் வாக்குப்பதிவு அந்த மையத்தில் மட்டும் தாமதம் ஆகியது.

சீா்காழி அருகே வருஷப்பத்து கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இணைப்பு ஆவதில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், இந்த வாக்குச்சாவடியிலும் சுமாா் 20 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமாகியது.