ஆம்பூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட ஆம்பூா் நகரம் ரெட்டித்தோப்பு பகுதியில் மஜ்ஹருல் உலூம் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடி எண்.153-ல் வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோது காலை சுமாா் 10.45 மணிக்கு திடீரென வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதனால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் இயந்திரத்தை சரிசெய்வதற்காக பொறியாளா்கள் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் அந்த வாக்குச் சாவடி மையத்துக்கு சென்றனா்.
அதிகாரிகள் சென்று அந்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனா். அதைத் தொடா்ந்து வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டது.
இயந்திரம் கோளாறு காரணமாக சுமாா் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டதால், 200-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அவா்கள் அமா்வதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படாததால் வாக்காளா்கள் பாதிப்புக்கு உள்ளானாா்கள்.

தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு இயந்திரத்தில் கோளாறு: தாமதமான வாக்குப் பதிவு

அலங்காநல்லூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: பொதுமக்கள் வாக்குவாதம்

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


