மதுரை அலங்காநல்லூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படாததால், ஒரு வாக்குச் சாவடியில் 2 மணி நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது. இதனால், பொதுமக்கள் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
சோழவந்தான் (தனி) தொகுதிக்குள்பட்ட அலங்காநல்லூரில் உள்ள மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படாததால், வாக்குப் பதிவைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னா், வேறொரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த இயந்திரமும் செயல்படவில்லை.
இதனால், அங்கு வாக்களிக்க நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சிலா் வாக்குச் சாவடியின் கதவை அடைக்க முற்பட்டனா். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, வாக்குப் பதிவு அலுவலா்கள், காவல் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். பிறகு, வேறொரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப் பதிவு தொடங்கியது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக இந்த வாக்குச் சாவடியில் ஏறத்தாழ 2 மணி நேரம் வாக்குப் பதிவு தடைபட்டது.
தொடர்புடையது

அவிநாசியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

வாக்குப் பதிவுக்கு தயாா்நிலையில் அரூா் தொகுதி!

திருச்செந்தூா் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


