தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் தில்லி எம்.எல்.ஏ. மற்றும் மூன்று வழக்கறிஞர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த திங்கள்கிழமை அவர் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் தாக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக, பாரதீய ஜனதா கட்சியின் தில்லி எம்.எல்.ஏ. ஒ.பி.சர்மா மற்றும் மூன்று வழக்கறிஞர்களுக்கு தில்லி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.