நீதிமன்ற வளாக தாக்குதலில் கன்னையாவுக்கு காயங்கள்: மருத்துவ அறிக்கை

பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜவகர்லால் நேரு பல்கலை மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையா குமாரின் உடலில் காயங்கள் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜவகர்லால் நேரு பல்கலை மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையா குமாரின் உடலில் காயங்கள் இருப்பதாக மருத்துவ அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னையாவின் இடது காலிலும், மூக்கிலும் சிராய்ப்புகள் உள்ளன. காலின் விரல்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி காவல்துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸி கூறுகையில், கன்னையா மீதான தாக்குதல் குறித்து காவலர்கள் என்னிடம் கூறினர். அது எந்த வகையில் பார்த்தாலும் தவறான செயல். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது குறித்து வேறு எந்த கருத்தும் கூற முடியாது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com