வரதட்சிணை விவகாரம்: திங்களன்று நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தினார் மணமகள்

ராஜஸ்தானில், அரசுப் பள்ளியில் பணியாற்றும் 24 வயதான ஆசிரியை, மணமகன் வீட்டார் வரதட்சிணைக் கேட்டு பிரச்னை செய்ததால், அடுத்த வாரம் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
Updated on
1 min read

ராஜஸ்தானில், அரசுப் பள்ளியில் பணியாற்றும் 24 வயதான ஆசிரியை, மணமகன் வீட்டார் வரதட்சிணைக் கேட்டு பிரச்னை செய்ததால், அடுத்த வாரம் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பைதாபுரா கிராமத்தைச் சேர்ந்த பாரதி யாதவ் என்கிற பிங்கி என்ற ஆசிரியைக்கு வரும் 22ம்ட தேதி திருமணம் நடைபெறவிருந்தது.

இந்த நிலையில், மணமகன் வீட்டார் வரதட்சிணையாக கார் வாங்கிக் கொடுக்குமாறு பெண் வீட்டாரை வற்புறுத்தியுள்ளனர். தற்போது முடியாது என்று பெண் வீட்டார் கூறியதற்கு, கார் கொடுக்கவில்லை என்றால் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

மேலும், திருமணம் முடிந்து 6 மாதத்தில் மாப்பிள்ளைக்கு கார் வாங்கிக் கொடுப்பதாக பத்திரத்தில் கையெழுத்திடுமாறு மணமகளின் தந்தையை மாப்பிள்ளை வீட்டார் வற்புறுத்தினர்.

 இதனால் அதிருப்தி அடைந்த மணப்பெண் பாரதி, மாப்பிள்ளை வீட்டார் மீது காவல்நிலையத்தில் வரதட்சிணைப் புகார் அளித்தார். இது குறித்து மாப்பிள்ளை வீட்டாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்களது பதிலுக்காக காத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com