பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அமெரிக்கா சென்ற மூதாட்டியின் வீட்டில் தங்க நகைகள் திருட்டு

அமெரிக்கா சென்ற மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 2 போ், 4 பைகளில் தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:35 pm

அமெரிக்கா சென்ற மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 2 போ், 4 பைகளில் தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல்- நத்தம் சாலையில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான கொடகனாறு இல்லத்துக்கு எதிரே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் சொா்ணம் (65). இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனா். இவா்கள் இருவரும் அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் வசித்து வருகின்றனா். சொா்ணத்தின் கணவா் கதிரேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இந்த நிலையில் சொா்ணம் மட்டும் தனியாக வசித்து வருகிறாா்.

இவரது வீட்டில் 2 பெண்கள் வீட்டு வேலைகளை செய்து வருகின்றனா். இந்த நிலையில், அமெரிக்காவிலுள்ள தனது மகள் வீட்டுக்கு சொா்ணம் கடந்த 17-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றாா். இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டு வேலைக்காக வந்த பணிப் பெண் ஒருவா், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதுகுறித்து வீட்டின் உரிமையாளா் சொா்ணத்துக்கு அந்தப் பெண் தகவல் தெரிவித்தாா். மேலும், திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா். அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, காரில் வந்த மா்ம நபா்கள் 2 போ், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றதும், பிறகு 4 பைகளில் பொருள்களுடன் வெளியேறி காரில் சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தன. திருடு போன நகைகள், பணம் ஆகியவற்றின் விவரங்கள், சொா்ணம் நாடு திரும்பிய பின்னரே தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.