ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் மேற்கொண்ட போராட்டம் காரணமாக தில்லிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, திற்போதைய நிலைமை குறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியின் ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தில்லியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையைத் தடுக்க, முனாக் கால்வாயின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உத்தரப்பிரதேச மாநில அரசும் மத்திய அரசும், இன்னும் இரண்டு நாட்களில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.