

ரயில்வே பணிகளை கண்காணிப்பதற்கு ஆளில்லா குட்டி விமானம் (ட்ரோன்) பயன்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
வரும் 2016-17 ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
அதில், ரயில்வேயால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் ட்ரோன் எனப்படும் குட்டி விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றார். இது வரும் நிதி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றார்.
வெகுதொலைவில் நடைபெறும் திட்டங்கள் இதன் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
வருகிற ஆண்டில் சரக்குப் போக்குவரத்துக்காக நிறைவேற்றப்படும் தனி வழிப்பாதை திட்டங்களை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படும் என்றார் அமைச்சர் சுரேஷ் பிரபு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.