பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ரயில்வே பணிகளை கண்காணிப்பதற்கு ஆளில்லா குட்டி விமானம்

ரயில்வே பணிகளை கண்காணிப்பதற்கு ஆளில்லா குட்டி விமானம் (ட்ரோன்) பயன்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

News image
Updated On :25 பிப்ரவரி 2016, 3:12 pm

ரயில்வே பணிகளை கண்காணிப்பதற்கு ஆளில்லா குட்டி விமானம் (ட்ரோன்) பயன்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

வரும் 2016-17 ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

அதில், ரயில்வேயால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் ட்ரோன் எனப்படும் குட்டி விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றார். இது வரும் நிதி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றார்.

வெகுதொலைவில் நடைபெறும் திட்டங்கள் இதன் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

வருகிற ஆண்டில் சரக்குப் போக்குவரத்துக்காக நிறைவேற்றப்படும் தனி வழிப்பாதை திட்டங்களை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படும் என்றார் அமைச்சர் சுரேஷ் பிரபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.