மத்திய அரசு அறிமுகப்படுத்தப்படவிருக்கும் `வறுமையில் உள்ளவர்கள் பாதுகாப்புச் சட்ட'த்தில் பிச்சை எடுப்பது குற்றம் என்பது நீக்கப்படுகிறது.
மத்திய அரசு `வறுமை நிலையில் உள்ளவர்கள் (பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) சட்டம், 2015' என்ற புதிய சட்டத்துக்கான வரைவுகளை வெளியிட்டுள்ளது.
இதில் வறுமை நிலையில் இருப்பவர்கள் என்பதின் கீழ் வறுமையில் உள்ளவர்கள், கைவிடப்பட்டவர்கள், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், தங்க இடம் இல்லாதவர்கள், யாசகர்கள், உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த புதிய சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில அரசும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்காக மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும். அந்த மையங்களில் பயிற்றுவிக்கப்பட்டப் போதியப் பணியாளர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதுதவிர தொழில் பயிற்சி அளிக்கும் நிபுணர்களும் நியமிக்கப்பட வேண்டும்.
பெண்களுக்காகவும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்தனியே மையங்களை உருவாக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் மறுவாழ்வு மையங்களை போதிய வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும்.
வறுமை நிலையில் உள்ளவர்களை கண்டறிவதற்காக மாவட்டந்தோறும் குழுக்களை உருவாக்க வேண்டும். வறுமை நிலையில் உள்ளவர்களுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள், உதவிகள் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.
மேலும், இதற்காக அரசு ஒரு கண்காணிப்பு மற்றும் ஆலோசனை குழுவை உருவாக்கி இத்திட்டத்தை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். அனைத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு ஒருங்கிணைப்பு குழுவையும் ஏற்படுத்தி, வறுமை நிலையில் உள்ளவர்களுக்காக செயல்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மேலும், தற்போது பிச்சை எடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை கைவிடவும் வரைவு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

ரைபகினா, ஆஸ்டபென்கோ முன்னேற்றம்

ஒரே நபா் இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு: தோ்தல் அலுவலரிடம் புகாா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


