தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குல்பர்க் சொசைட்டி வழக்கு: 24 பேர் குற்றவாளிகள், 36 பேர் விடுதலை

குஜராத் மாநிலம், குல்பர்க் சொசைட்டி வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என்றும், இவ்வழக்கிலிருந்து 36 பேரை விடுதலை செய்தும் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Updated On :2 ஜூன் 2016, 7:49 am

புது தில்லி: குஜராத் மாநிலம், குல்பர்க் சொசைட்டி வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என்றும், இவ்வழக்கிலிருந்து 36 பேரை விடுதலை செய்தும் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குஜராத்தில் அகமதாபாத் குல்பர்க் சொசைட்டி மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்ட  வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமனறம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி அதுல் வைத்தியா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 36 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டடோரில் பாரதிய ஜனதா கவுன்சிலர் பிபின் பட்டேலும் ஒருவர். குல்பர்க் படுகொலை வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் 6-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த 2002 பிப்ரவரி 27-ம் தேதி குஜராத்தின் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையில் அடுத்த நாள் அகமதாபாத் சமன்பூராவில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் ஆயிரக்கணக்கானோர் அடங்கிய கும்பல் ஒன்று புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் எரித்தும், கொடூர ஆயுதங்களால் தாக்கியும் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் எம்.பி., இசன் ஹாப்ரி என்பவரும் உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.