தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கடத்தப்பட்ட இந்திய சிறுவன் ஆறு ஆண்டுகளுக்குப் பின் வங்கதேசத்தில் இருந்து மீட்பு

கிழக்கு தில்லியில் கடத்தப்பட்ட இந்திய சிறுவன் ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு இன்று தனது பெற்றோருடன் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2016, 10:35 am

புது தில்லி: கிழக்கு தில்லியில் கடத்தப்பட்ட இந்திய சிறுவன் ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு இன்று தனது பெற்றோருடன் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2010-ல் சோனு என்ற சிறுவன் இரண்டு பெண்களால் கடத்தப்பட்டான். கடத்தப்பட்ட சிறுவன் தில்லியில் இருந்து பங்களாதேஷ் நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் விசாரிக்கையில் சிறுவன் கடத்தப்பட்டது தெரிய வந்தது. பின்பு, பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஜமால் இன் மூசா என்பவர் பெரும் சிரமப்பட்டு பல்வேறு முயற்சிகளை எடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பின் சிறுவனைத் தனது பெற்றோருடன் சேர்த்து வைத்துள்ளார்.

பர்குனா மாவட்டம் நீதிமன்றம் மூலம் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் சிறுவனை ஒப்படைக்க முடிவு செய்தார். அதன்பின்பு கூடுதல் மாவட்ட நீதிபதி அபு தாஹர் மனிதாபிமான அடிப்படையில் ஒரு லட்சம் டாகா (வங்காள நாணயம்) வழங்கி இந்திய தூதரக அதிகாரிகளிடம் சோனுவை ஒப்படைத்தனர். அதன்பின்பு இன்று தில்லியை அடைந்தான் சிறுவன் சோனு.

இதுகுறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது....

சிறுவனை பத்திரமாக காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார். மேலும், டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சோனு தன் பெற்றோருடன் அனுப்பப்பட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.