இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவுக்கு தனிச் சின்னம் அறிமுகம்: நஜீம் ஜைதி

ஐந்து மாநிலங்களுக்கு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவுக்கு தனிச் சின்னம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

ஐந்து மாநிலங்களுக்கு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவுக்கு தனிச் சின்னம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பினை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவிக்கிறார்.

புது தில்லியில் இன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசி வரும் நஜீம் ஜைதி,

ஒட்டுமொத்தமாக 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மொத்தம் 17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மேற்கு வங்கம் 294 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் 126 தொகுதிகளுக்கும், தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையை பொறுத்து வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கு.

அசாமில், சுமார் 25,000 வாக்குச்சாவடிகளும், கேரளாவில் 21,000 வாக்குச்சாவடிகளும், தமிழ்நாட்டில் 65,000 வாக்குச்சாவடிகளும், மேற்குவங்கத்தில் 77,000 வாக்குச்சாவடிகளும், புதுச்சேரியில் 913 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.