தில்லியில் யமுனை ஆற்றங்கரையோரம் உலக கலாசார விழா நடத்துவதற்கு பசுமை அபராதமாக ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது தில்லி பசுமை தீர்ப்பாயம்.
வாழும் கலை அமைப்பு சார்பி நாளை மறுநாள் முதல் நடைபெற உள்ள உலக கலாசார விழாவினால், யமுனை ஆறு மாசுபாடு அடையும் என்று பல்வேறு அமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், வாழும் கலைக்கு பசுமை அபராதமாக ரூ.5 கோடி அபராதம் விதிப்பதாகவும், அதனை நிகழ்ச்சி தொடங்கும் முன் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும் தனது தீர்ப்பில், விழா முடிந்ததும், அவ்விடத்தை உயிரியல் பூங்காவாக மாற்றலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது.
சுற்றுச் சூழலை மேலும் மாசுபடுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என பசுமைத் தீர்ப்பாயம்
உலக கலாசார விழா நடத்த அனுமதி அளித்த விவகாரத்தில், சரிவர கடமையாற்றாதக் குற்றத்துக்காக தில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கும், ரூ 5 லட்சமும், மாசு கட்டுப்பாட்டு அமைப்புக்கு ரூ.1 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.