உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் சிறையில் 14 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடத்தும் மருத்துவ முகாமில் நடத்திய ஆய்வில் ஒரு பெண் உட்பட 14 பேர் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 2518 பேருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அதில், 14 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.