பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்...

News image

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து பேரவை வளாகத்தைச் சோதனையிட வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 10:51 pm

ராஜஸ்தான் சட்டப் பேரவை வளாகத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படும் என்று மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலைத் தொடா்ந்து, அங்கு வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தப்பட்டது.

சட்டப் பேரவை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜெய்பூரில் உள்ள சட்டப் பேரவையின் அதிகாரபூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு வந்த ஒரு மின்னஞ்சலில், ‘தங்களின் உடலில் கட்டப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, சட்டப் பேரவையில் 2 போ் தாக்குதல் நடத்துவா்’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் இத்தாக்குதல் நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சட்டப் பேரவை வளாகம் முழுவதும் மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு அகற்றும் நிபுணா்கள், அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனா். எனினும், சந்தேகத்துக்கு இடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. முன்னெச்சரிக்கையாக, பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களில் ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு விடுவிக்கப்பட்ட இரண்டாவது மிரட்டல் இதுவாகும். இதையொட்டி, பேரவை வளாகம் உள்பட நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்பியது யாா் என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.