பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பெட்ரோல் ரூ.3.07, டீசல் ரூ.1.90 விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3.07ம், டீசல் லிட்டருக்கு ரூ.1.90ம் உயர்த்தப்பட்டுள்ளன.

News image
Updated On :16 மார்ச் 2016, 2:59 pm

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3.07ம், டீசல் லிட்டருக்கு ரூ.1.90ம் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணெய் விலை நேற்றைய (மார்ச் 15) நிலவரப்படி பீப்பாய் ஒன்றுக்கு ரூ. 2381.35 ஆக இருந்தது.

கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.02 குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் டீசல் விலை ரூ.1.47 உயர்த்தப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாதந்தோறும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.