பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 11:54 pm

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

நீலகிரி மாவட்டம், கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ஆம் தேதி மா்ம நபா்கள் நுழைந்து, அங்கிருந்த காவலாளியை கொலை செய்து, பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றது. இது தொடா்பாக முக்கிய எதிரியான சயான் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.  இந்த வழக்கு  உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில்  இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், அரசு தரப்பு வழக்குரைஞா் ஷாஜகான், ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாா் ஆஜராகினா். குற்றம் சுமத்தப்பட்டவா்கள் தரப்பில் சயான் மற்றும் ஜித்தின் ஜாய் ஆஜராகினா்.

வழக்கு விசாரணையின்போது நீதிபதி செந்தில்குமாா், தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து, வழக்கு விசாரணையை  ஜூன் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.