40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மென்பொறியாளா் கொலை வழக்கு: பெண் எஸ்.ஐ.யின் பிணை மனு ஒத்திவைப்பு

மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் பெண் காவல் உதவி ஆய்வாளரின் பிணை மனு இம் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :4 ஜூன் 2026, 1:17 am IST

மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் பெண் காவல் உதவி ஆய்வாளரின் பிணை மனு இம் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின். மென்பொறியாளரான இவா், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இவ்வழக்கில் கே.டி.சி. நகரைச் சோ்ந்த சுா்ஜித், அவரது தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன், உறவினா் ஜெயபால் ஆகியோா் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சுா்ஜித்தின் தாயாரான பெண் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாரியை அண்மையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து தனக்கு பிணை வழங்கக் கோரி கிருஷ்ணகுமாரி தரப்பில், திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஹேமா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, கிருஷ்ணகுமாரியின் பிணை மனு மீதான விசாரணையை இம் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.