

உண்மையை பாஜக திரித்துக் கூறுவதாகவும், உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் தற்போதும் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயார் என்றும் அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.
எங்களுக்கு 35 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறுபவர்கள் உண்மையை மறைக்கிறார்கள். சட்டப்பேரவையில் எனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று இப்போதும் நான் நம்புகிறேன். சட்டப்பேரவையில் எப்போது வேண்டுமானாலும் அதனை நிரூபிக்கத் தயாராக உள்ளேன் என்றும் ராவத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 அதிருப்தி எம்எல்ஏக்கள் உட்பட 35 எம்எல்ஏக்களின் ஆதரவு பாஜகவுக்கு இருப்பதாகக் கூறுகிறது.
ஆனால், அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேரில் 5 பேர் தொடர்ந்து தன்னிடம் தொடர்பில் இருப்பதாகவும் ராவத் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.