இமாச்சலப் பிரதேச அரசின் பொது வழங்கல் துறை விநியோகித்த பருப்புப் பாக்கெட்டில் செத்த எலி இருந்ததை அம்மாநில அமைச்சர் ஜி.எஸ். பாலி ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும், அந்த பருப்பு சாப்பிட உகந்ததாக இல்லை என்றும் ஆய்வுச் சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அம்மாநில பாஜக அமைச்சர் ராஜீவ் சைஜால் பேசுகையில், மாநில பொது வழங்கல் துறை வசம் இருந்த 500 பருப்பு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் இரண்டு பாக்கெட்டுகள் மட்டுமே மனிதன் சாப்பிட உகந்ததாக இல்லை என்று கூறப்பட்டதே தவிர, மற்ற பாக்கெட்டுகளில் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தார்.
எலி இருந்த பருப்பு பாக்கெட், தரம்புரில் உள்ள மொத்தக் கொள்முதல் கிடங்கில் இருந்து பிப்ரவரி 20ம் தேதி விநியோகிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவு ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார் என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் அருகே பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

டிஎன்பிஎல் லாபம் ரூ. 247.75 கோடி

மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

நோய்நாடி நோய்முதல் நாடி...
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


