பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பெரும்பான்மை உள்ளது; நிரூபிக்கத் தயார்: உத்தரகாண்ட் முதல்வர்

உண்மையை பாஜக திரித்துக் கூறுவதாகவும், உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் தற்போதும் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயார் என்றும் அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.

News image
Updated On :19 மார்ச் 2016, 9:43 am

உண்மையை பாஜக திரித்துக் கூறுவதாகவும், உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் தற்போதும் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயார் என்றும் அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.

எங்களுக்கு 35 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறுபவர்கள் உண்மையை மறைக்கிறார்கள். சட்டப்பேரவையில் எனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று இப்போதும் நான் நம்புகிறேன். சட்டப்பேரவையில் எப்போது வேண்டுமானாலும் அதனை நிரூபிக்கத் தயாராக உள்ளேன் என்றும் ராவத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 அதிருப்தி எம்எல்ஏக்கள் உட்பட 35 எம்எல்ஏக்களின் ஆதரவு பாஜகவுக்கு இருப்பதாகக் கூறுகிறது.

ஆனால், அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேரில் 5 பேர் தொடர்ந்து தன்னிடம் தொடர்பில் இருப்பதாகவும் ராவத் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.