

நிலுவையைச் செலுத்தத் தவறினால், கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று விஜய் மல்லையாவுக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் இல்லை என்றால் வங்கிகளின் தரப்பிலும், விசாரணைக் கழகங்களும் எடுக்கும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறிய அவர், தனிநபர் விவகாரம் குறித்து எந்த கருத்தையும் கூற தான் விரும்பவில்லை. ஆனால், இதுபோன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும், வங்கிகளில் இருக்கும் நிலுவைத் தொகையை சரியாக செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இல்லையென்றால், விஜய் மல்லையா செலுத்த வேண்டிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை வசூலிக்க வங்கிகள் மாற்று நடவடிக்கையை தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.
மல்லையாவின் சொத்து ஆவணங்கள் வங்கிகளிடம் உள்ளது. வங்கிகளும், இதர நிறுவனங்களும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடனை வசூலிக்கும் மாற்று ஏற்பாடுகளை, விசாரணை ஆணையத்திடம் இணைந்து ஆலோசனை நடத்தி வருகின்றன என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.