

துலியாஜன்: வங்கதேசத்தினர் அஸ்ஸாம் மாநிலத்துக்குள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில், இந்திய - வங்கதேச எல்லையை மத்திய அரசு முழுவதுமாக மூடிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அஸ்ஸாம் மாநிலம் துலியாஜன் நகரில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் அத்துமீறி ஊடுருவுவது தொடர்கதையாகவே உள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், ஊடுருவலுக்கு காரணம் என்ன? அஸ்ஸாம் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி ஊடுருவலை தடுத்து நிறுத்த இதுவரை முயற்சிக்காதது ஏன்? ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழையப் பயன்படுத்தும் இந்திய - வங்கதேச எல்லையை ஏன் முழுவதுமாக அடைக்கவில்லை? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மேலும், எல்லையை மூடுவது குறித்து அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்திய- வங்கதேச எல்லையை முழுவதுமாக அடைத்துவிட்டால், ஊடுருவல்காரர்களால் இந்தியாவுக்குள் நுழைய முடியாது. இதை மத்திய அரசு விரைவில் செய்யும் என்றார் ராஜ்நாத் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.