பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கொல்கத்தாவில் புதிய பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி?

கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் பத்து பேர் பலியாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தெரிகிறது.

News image
Updated On :31 மார்ச் 2016, 9:22 am

கொல்கத்தா : கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் பத்து பேர் பலியாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தெரிகிறது.

வடக்கு கொல்கத்தாவில் கணேஷ் திரையரங்கு அருகே புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இன்று பிற்பகலில், பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், ஏராளமான வாகனங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளன.

இச்சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி 10 வரை இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 100 பேர் வரை சிக்கியுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள வாகனங்களிலிருந்து கசிந்த எரிபொருள் மூலம் அங்கிருந்த பொருள்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்பு தூண்கள் அப்படியே கீழே விழுந்ததால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

மீட்புப்படையினர் அங்கு முகாமிட்டு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.