பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

வீரர்களின் திடீர் ஆய்வுப் பணி குறித்த விவரம் கசிந்துள்ளது: சிஆர்பிஎஃப் அதிர்ச்சி

தண்டேவாடா பகுதியில் சிஆர்பிஎஃப் படையினர் ரோந்து வரும் தகவல் எப்படியோ கசிந்திருப்பதால்தான், மிக மோசமான கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிஆர்பிஎஃப் கூறியுள்ளது.

Updated On :31 மார்ச் 2016, 8:55 am

ராய்புர்: தண்டேவாடா பகுதியில் சிஆர்பிஎஃப் படையினர் ரோந்து வரும் தகவல் எப்படியோ கசிந்திருப்பதால்தான், மிக மோசமான கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிஆர்பிஎஃப் கூறியுள்ளது.

ஏதோ ஒரு வகையில், சிஆர்பிஎஃப் படையினரின் நடமாட்டம் குறித்து தகவல் வெளியே கசிந்துள்ளது. எங்கேயோ, ஏதோ ஒரு இடத்தில் இது நிகழ்ந்துள்ளது. தண்டேவாடா பகுதியில் படை வீரர்கள் திடீர் ஆய்வினை மேற்கொண்டனர். அது பற்றி எப்படி தெரிந்தது என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று சிஆர்பிஎஃப் இயக்குநர் கே. துர்கா பிரசாத் கூறினார்.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் தண்டேவாடா பகுதியில் நேற்று நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 7 பேர் பலியாகினர்.  இதில், டாடா-709 மினி டிரக் முற்றிலும் சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.