கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: மீட்புப் பணியில் ராணுவம்

கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் பத்து பேர் பலியாகினர். ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: மீட்புப் பணியில் ராணுவம்
Updated on
1 min read

கொல்கத்தா : கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் பத்து பேர் பலியாகினர். ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினருடன் ராணுவ வீரர்களும் இணைந்துள்ளனர்.

கட்டுமானப் பணிகளின் போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், கட்டுமானத் தொழிலாளர்களும், அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது.

இதனால், இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியிருக்கலாம் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. இதுவரை 10 பேர் பலியானதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com