மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 'சோதனை' சம்பவம் ஆனது
புது தில்லியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை சோதனை ஓட்டம் நடத்திய போது, இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.


புது தில்லி: புது தில்லியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை சோதனை ஓட்டம் நடத்திய போது, இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
ஜானகிபுரி - பொடானிகல் கார்டர் பகுதிகளுக்கு இடையே கலன்டி கஞ்ச் ரயில் நிலையத்துக்கு அருகே ஒரே டிராக்கில் வந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
புதிதாக அமைக்கப்பட்டு வந்த ரயில் பாதையில், வெள்ளிக்கிழமை அன்று ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்கி சோதனை நடத்திய போது இந்த சம்பவம் நடந்தது. அதிர்ஷ்டவசமாக ரயிலில் யாரும் இல்லாததால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த வழித் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை 2017ம் ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...