காவல்துறையினருடன் துப்பாக்கிச் சண்டை: ஜார்கண்ட்டில் 6 மாவோயிஸ்ட்டுகள் பலி!

காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில்  ஜார்கண்ட் மாநிலத்தில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
காவல்துறையினருடன் துப்பாக்கிச் சண்டை: ஜார்கண்ட்டில் 6 மாவோயிஸ்ட்டுகள் பலி!

ராஞ்சி: காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில்  ஜார்கண்ட் மாநிலத்தில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஜார்கண்ட் மாநில காவல்துறை ஐ.ஜியும், செய்தி தொடர்பாளருமான எம்.எஸ்.பாட்டியா செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்ததாவது:

லதேர் மாவட்டம் சிப்பதொஹர் காவல்நிலைய கண்காணிப்பின்கீழ் வரும் பகுதியில், இன்று பாதுகாப்பு படைகளுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.   

6 மாவோயிஸ்டுகளின்  உடல்களும் ஆயுதங்ககளுடன் கைப்பற்றப்பட்டன. காயம்பட்ட வேறு மாவோயிஸ்ட்டுகள் யாரேனும் அங்கு ஒளிந்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com