ராஞ்சி: காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜார்கண்ட் மாநிலத்தில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஜார்கண்ட் மாநில காவல்துறை ஐ.ஜியும், செய்தி தொடர்பாளருமான எம்.எஸ்.பாட்டியா செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்ததாவது:
லதேர் மாவட்டம் சிப்பதொஹர் காவல்நிலைய கண்காணிப்பின்கீழ் வரும் பகுதியில், இன்று பாதுகாப்பு படைகளுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 6 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
6 மாவோயிஸ்டுகளின் உடல்களும் ஆயுதங்ககளுடன் கைப்பற்றப்பட்டன. காயம்பட்ட வேறு மாவோயிஸ்ட்டுகள் யாரேனும் அங்கு ஒளிந்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.