மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நாடாளுமன்றத்தை சந்திக்க அஞ்சும் பிரதமர்: கெஜ்ரிவால் கடும் தாக்கு!

ருபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த விவகாரத்தில்  நாடாளுமன்றத்தை சந்திக்க அஞ்சி பிரதமர்: மோடி தவிர்க்கிறார் என்று அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:58 am

DIN

புதுதில்லி: ருபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தை சந்திக்க அஞ்சி பிரதமர்: மோடி தவிர்க்கிறார் என்று அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில் ருபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்றும், அதில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.  இதனால் எழுந்துள்ள பிரச்சினைகளினால் நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் தவித்து வருகிறது.   

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மோடியின் செயல்பாடுகளை தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் காட்டமாக விமர்சித்துள்ளார்.அவர் இன்று தனது டிவிட்டர்  பக்கத்தில், 'நாடாளுமன்றத்திற்கு செல்லுமாறு பிரதமருக்கு ஜனாதிபதி அறிவுறுத்த வேண்டும். நாடாளுமன்றத்தை சந்திக்க அஞ்சும் முதல் பிரதமர் இவர்தான்' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.