அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மலப்புரம் என்கவுன்ட்டர் விவகாரம்: இறந்த மாவோயிஸ்ட்டுகள் உடலை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு!

மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று கமாண்டோ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு மாவோயிஸ்ட்டுகளின்  உடல்களை நாளை வரை பாதுகாத்து வைக்குமாறு...

News image
Updated On :28 நவம்பர் 2016, 10:16 am

மஞ்சேரி: மலப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று கமாண்டோ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு மாவோயிஸ்ட்டுகளின்  உடல்களை நாளை வரை பாதுகாத்து வைக்குமாறு மஞ்சேரியில் உள்ள நீதிமன்றம் ஒன்று காவலதுறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் காட்டுப்பகுதியில்,கடந்த வெள்ளிக்கிழமை அன்று கமாண்டோ படையினருடன் நடந்த மோதலில், இரண்டு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.வழக்கமான சோதனையின் போது , மாவோயிஸ்ட்டுகளை கண்டறிந்தததாகவும், அவர்கள் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த துவங்கியதும்தான் வேறுவழியின்றி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஏற்கவில்லை,. இது காவல்துறையினர் நடத்திய போலி என்கவுண்டர் என்று குற்றம் சாட்டின. மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரில் ஒருவரது சகோதரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை இன்று  விசாரித்த நீதிமன்றம் நாளை  இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதாகவும், அதுவரை இரண்டு உடல்களையும் பாதுகாத்து வைக்குமாறு அரசுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.உடல்கள் இரண்டும் தற்போது கோழிக்கோடு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.