குப்வாரா ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
Updated on
1 min read


ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

குப்வாரா மாவட்டம் லாங்கேட் பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது இன்று காலை 5 மணியளவில் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனடியாக ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து பயங்கரவாதிகள் தப்பியோடினர்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் இறுதியில், 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com