சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மும்பை குடியிருப்பின் 20வது மாடியில் பயங்கர தீ விபத்து: 2பேர் உடல் கருகி பலி

தெற்கு மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று காலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

News image
Updated On :18 அக்டோபர் 2016, 6:03 am


மும்பை: தெற்கு மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று காலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

தெற்கு மும்பையின் கஃப் பரேட் அருகே மேக்கர் சாம்பரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 20வது மாடியில் இன்று காலை 6.37 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து நடந்த இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2 பேர் உடல் கருகி பலியானதாகவும், 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.