சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பறவைக் காய்ச்சல் பீதி எதிரொலி: தில்லி உயிரியல் பூங்கா மூடல்

பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக தில்லியில் உள்ள உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.

Updated On :19 அக்டோபர் 2016, 10:06 am


புது தில்லி: பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக தில்லியில் உள்ள உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.

இந்த உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 8 நீர் பறவைகள், சில வாத்துகள், பெலிகான் பறவைகளுக்கு அவியா எனப்படும் நோய் பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து உயிரியல் பூங்கா அதிகாரி கூறுகையில், பூங்காவில் உயிரிழந்த வாத்துகளின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பிறகே முடிவுகள் எடுக்கப்படும். எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை உயிரியல் பூங்கா மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.