மும்பை: பாரத ஸ்டேட் வங்கியுடன் (எஸ்பிஐ) அதன் 5 துணை வங்கிகள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வங்கிகளின் ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள விருப்ப ஓய்வுத் திட்டத்தை ஏற்று, 2,800 பேர் மட்டுமே ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ளதாக எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
இணைக்கப்பட்ட துணை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 12,500 ஊழியர்களுக்கு எங்களது விருப்ப ஓய்வு திட்டத்தில் பங்கேற்பதற்கான தகுதி இருப்பினும், இதுவரை 2,800 ஊழியர்கள் மட்டுமே அந்தத் திட்டத்தை ஏற்று, ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
வரும் புதன்கிழமை வரை (ஏப். 5) ஊழியர்கள் இந்தத் திட்டத்தில் பலனடையலாம் என்றார் அவர்.
எஸ்பிஐ-யின் துணை வங்கிகளான பைகானூர் - ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, ஹைதராபாத் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, பட்டியாலா ஸ்டேட் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி ஆகியவை இந்த மாதம் 1-ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன.
இதையடுத்து, எஸ்பிஐ ஊழியர்களின் எண்ணிக்கை 2,00,820-இலிருந்து 2,70,011-ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், துணை வங்கிகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, 55 வயது பூர்த்தியானவர்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்கான திட்டத்தை எஸ்பிஐ அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2030-31க்குள் 8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!

எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

கேரளம்: அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


