கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குறைந்த விலையில் தரமான மருத்துவ சிகிச்சை

'நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:14 pm

DIN

'நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, 'உலக சுகாதார தினம்' ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் மோடி சுட்டுரை வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
உலக சுகாதார தினத்தையொட்டி அனைவரும் பூரண ஆரோக்கியத்துடன் திகழ இறைவனை வேண்டுகிறேன். ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் அனைவரும் தத்தம் கனவுகளில் வெற்றி பெற முடியும். நாட்டில் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், குறைந்த விலையில் தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இதன் ஓர் அங்கமாக அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
உலக சுகாதார தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் மன அழுத்தமாகும். இதுகுறித்து அண்மையில் வானொலியில் ஒலிபரப்பான 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் நான் பேசியுள்ளேன் என்று அந்த செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.