மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தில்லி ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற அய்யாகண்ணு கைது

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றதால், அய்யாகண்ணு கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:14 pm

DIN


புது தில்லி: தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றதால், அய்யாகண்ணு கைது செய்யப்பட்டார்.

தில்லியில் மிகுந்த பாதுகாப்பு நிறைந்த நாடாளுமன்றம் மற்றும் ரிசர்வ் வங்கி கட்டங்களை முற்றுகையிட முயன்றதால், விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு உட்பட 15 விவசாயிகளை தில்லி போலிஸ் கைது செய்தது.

பிறகு, அய்யாகண்ணுவுடன் போராடிய மற்ற 15 தமிழக விவசாயிகளையும் விடுவித்தது தில்லி போலிஸ். அவர்கள் அனைவரும் தில்லி ஜந்தர் மந்தரில் இறக்கிவிடப்பட்டனர்.

ஆனால், அய்யாகண்ணுவை கைது செய்த நாடாளுமன்ற வீதி காவல்நிலை போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.